pic file copy

மணவளன்நகர், மார்ச். 07 –

திருவள்ளூர்மாவட்டம் மணவாளன் நகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட போளிவாக்கம் கிராமம் அண்ணாமலை என்பவரின் மகன் தனபால் வயது 30 என்பவர் மனைவி மஞ்சுளா வயது 27 உடன் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இவர் தனியார்கம்பெனி ஒன்றில் பெயிண்டராக வேலைப் பார்த்து வந்துள்ளார்.

  இந்நிலையில் சம்பவ நாளான நேற்று முன்தினம் மார்ச் 5 ஆம் தேதியன்று மாலை சுமார் ஐந்து மணியளவில் போளிவாக்கம் பகுதியில் உள்ள சித்தேரி சுண்ணாம்பு கால்வாயில் குளித்து விட்டு வருவதாக மனைவியிடம் கூறி விட்டு சென்றுள்ளார்.

  நீச்சல் தெரியாத அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் கரைக்கு திரும்ப முடியாமல் நீரில் மூழ்கி இறந்து விட்டார். என்று தனபால் மனைவி மஞ்சுளா மணவாளன் காவல் நிலையத்தில் அவர் நேற்று மார்ச் 6 காலை அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

  இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  முதற்கட்ட விசாரணை மற்றும் தொடர் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here