மாதவரம், மார்ச். 21 –
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட பெரிய மாத்தூர் கிராம மக்கள் பல்வேறு அடிப்படைத் தேவைகளை செய்து தர வலியுறுத்தி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்ற மாநிலத் தலைவர் இ.மெய்யழகன் தலைமையில் நிர்வாகிகளுடன் சென்று 19ஆவது திமுக மாமன்ற உறுப்பினர் க. காசிநாதனை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தனர்.
மேலும், அம்மனுவில் மாத்தூர் கிராம மக்களுக்கு தேவைகள் குறித்து பின் வருமாறு அம்மனுவில் தெரிவித்திருந்தனர். பெரிய மாத்தூர் பொன்னியம்மன் கோவில் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வேண்டியும். உடற்பயிற்சிக் கூடம். மற்றும் சமுதாயக்கூடம் .உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து தெரிவித்துள்ளனர்.
அதனைப் பெற்றுக் கொண்டவர் மிக விரைவில் இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் அவருடன் திமுக 19வது வட்டக் கழக செயலாளர் கா தாமரைச்செல்வன் .அம்பேத்கர் மன்றத்தின் செயலாளர் நாகராஜ். மகளிர் குழு பொறுப்பாளர்கள் சந்திரா .ரங்கா .தேவி .கீதா .கலை. மற்றும் கோமதி. முன்னிலை நிர்வாகிகள் சகாதேவன் .ஜெயா. கதிரேசன் .நாகராஜன் .முகேஷ். குமார் .உள்ளிட்ட திரளான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.