கும்மிடிப்பூண்டி, ஆக. 13 –

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேர்வாய் ஊராட்சியில் 35 வீடுகள், மாதர்பாக்கம் ஊராட்சியில் 40 வீடுகள், முக்கரம்பாக்கமம் பகுதியில் 35 வீடுகள் ஏ.என் குப்பத்தில் 10 வீடுகள் என மொத்தம் 120 வீடுகளுக்கான பணி ஆணை வழக்கும் நிகழ்வு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் பங்கேற்று பயனாளிகளுக்கு பணி அணையை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில் தற்போது ஒதுக்கப்பட்ட மதிப்பீடானது கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் திட்ட மதிப்பீடு கூடுதலான ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப கூடுதலாக பணம் ஒதுக்கீடு செய்த பின்னர் பணி ஆணை வழங்கப்படும் என்றார்.

அதேபோல் தமிழகத்தில் முதல் தொகுதியான இத்தொகுதியினை இந்த ஆட்சி காலத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் உறுதுணையுடன்  தமிழகத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்க பல்வேறு அரசு நலத்திட்டங்களை வழங்கி முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் எனத்தெரிவித்தார்.

தொடர்ந்து, 75 ஆவது சுதந்திர அமுதவிழாவை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கும், பயனாளிகளுக்கும் தேசிய கொடியை வழங்கினார். தி.மு.க ஒன்றிய செயலாளர் மணிபாலன், ஒன்றிய குழு பெருந்தலைவர் சிவக்குமார், துணைப் பெருந்தலைவர் மாலதி குணசேகரன், பேரூராட்சி தலைவர் ஷகிலா அறிவழகன், மாவட்ட கவுன்சிலர் சாரதாம்மாள் முத்துசாமி ராமஜெயம், கவுன்சிலர்கள் ஜெயச்சந்திரன், பாசம் அன்பு, மதன் மோகன், சீனிவாசன் ஊராட்சி மன்ற தலைவர்கள் சீனிவாசன், முனிவேல், கோதண்டன், வீரன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here