கும்பகோணம், ஜூன். 02 –
பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு ரூபாய் ஆயிரத்து 200 கோடியை உடனடியாக வழங்க கோரி கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தேசிய கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் பல நூறு கோடி ரூபாய் பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு கடந்த மார்ச் மாதமே இழப்பீட்டிற்கான உரிய தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் அறிவிக்க வேண்டும் இதுவரை அறிவிக்கப்பட்டவில்லை, எனவே இழப்பீட்டு தொகையை உடனடியாக அறிவித்து மாநிலம் முழுவதும் வழங்க வேண்டிய ரூபாய் ஆயிரத்து 200 கோடியை உடனடியாக வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் காப்பீட்டு நிறுவனங்களை வலியுறுத்திட கோரி கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அதன் செயலாளர் சுந்தர விமலநாதன் தலைமையில் தேசிய கொடி ஏந்தியும், பிரதமர் நரேந்திர மோடி படத்தை வைத்து கொண்டும் ஏராளமான விவசாயிகள் திரண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.