கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் காவல் சரகம் மாத்தி ரம்யா நகரில் பெற்ற தாயை  கழுத்தை அறுத்து படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கும்ப கோணம், செப் . 15 –

கும்பகோணம் அருகே மாத்தி ரம்யா நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி (70 ) இவரது கடைசி மகன் பழனி (36). இன்னும் இவருக்கு திருமணம் ஆகவில்லை, மருத்துவ விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிய இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்து ஒன்றில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மனநலம் பாதிப்படைந்து, சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது தாயும், மகன் பழனியும் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என தெரிகிறது

இந் நிலையில் நேற்றிரவு தாய் சரஸ்வதியை பழனி கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை தெரியவரவே அக்கம்பக்கத்தினர் பழனியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பட்டீஸ்வரம் போலீசார் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகனே பெற்ற தாயை படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here