கும்பகோணம் அருகேயுள்ள அண்ணலக்ரஹாரம், சாந்த சற்குண காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

கும்பகோணம், செப் . 17 –

கும்பகோணம் அருகேயுள்ள அண்ணலக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள சாந்த சற்குண காளியம்மன் திருக்கோயில், உலக உயிர்களுக்கெல்லாம், இச்சா சக்தி, ஞான சக்தி, மற்றும் கிரியா சக்தி ரூபமாகவும்,

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல், என ஐந்து வகை தொழில்களுக்கான தலைவியாக விளங்கும் அன்னை பராசக்தி இத்தலத்தில் வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும், சாந்த சற்குண காளியம்மனாக அருள்பாலிக்கிறார்.

இத்தகைய பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலத்தில், பல ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேக திருப்பணிகள் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று முன்தினம் 15ம் தேதி யாகசாலை பூஜை கணபதி ஹோம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை ஆகியவற்றுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி,   இன்று காலை 2ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, மகா பூர்ணாஹதி சமர்பிக்கப்பட்டு, மகா தீபாராதனையும் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நாதஸ்வர, மேள தாள, மங்கள வாத்தியங்கள் முழங்க, புனிதநீர் நிரப்பிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு, தசமி திதி, உத்திராட நட்சத்திரம், துலா லக்னத்தில், புனிதநீரை கோபுர கலசத்தில் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here