சுவாமிமலை அருகே சுந்தரபெருமாள் கோவில் சமுதாய கூடத்தின் சுற்றுச்சுவரில் தனியார் பஸ் மோதி விபத்துக்கு உள்ளானது அதில் பயணம் செய்த  50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கும்பகோணம், டிச. 18 –

கும்பகோணம்  சுவாமிமலை அருகே சுந்தரப்பெருமாள் கோவிலில் தஞ்சாவூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த  தனியார் பேருந்து சுந்தரபெருமாள் கோவில் ரயில்வே கேட் எதிர்புறம் உள்ள சமுதாய கூடத்தின் சுற்றுச்சுவரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக அதிவேகமாக வந்த தனியார் பேருந்து சமுதாய கூட சுற்று சுவரில் மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் யாருக்கும் எந்தவித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்தில் பேருந்தின் முன் பக்கம் கண்ணாடி உடைந்து   சேதமடைந்தது .இந்த தனியார் பேருந்தை கடலூர் மாவட்டம் சிதம்பரம் சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ரகுராமன் வயது 40 என்பவர் ஓட்டி வந்துள்ளார். விபத்து நடந்த உடன் அருகில் இருந்த கிராம மக்கள் உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டு, பேருந்தில் பயணம் செய்த பயணிகளை மீட்டர்கள். இந்த விபத்துக் குறித்து தகவலறிந்த சுவாமிமலை காவல்துறை சரக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here