கும்பகோணம் அருகேவுள்ள பந்தநல்லூர் காவல் நிலைய சரகத்திற் குட்பட்ட வேட்ட மங்கலத்தை சார்ந்த வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்களுக்கிடைய ஏற்பட்ட காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறில் காதலன் கத்தியால் குத்தப்பட்டு மரணம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெண்ணின் தந்தையை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கும்பகோணம், அக். 10 –

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வேட்டமங்கலம் கீழத் தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் பிரபாகரன் ( 22 ) ஆட்டோ டிரைவராக பணி புரிந்து வருகிறார். காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (45) வெல்டர். இவரது மகள் பந்தநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

 கடந்த ஒன்றரை ஆண்டுகளாக  பிரபாகரனும் மணிகண்டன் மகளும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இதற்கு பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு  இருந்து வந்துள்ளது

இந் நிலையில் நேற்றிரவு காமாட்சிபுரம் கடைவீதியில் நின்று கொண்டிருந்த பிரபாகரனுக்கும், மணிகண்டனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருகட்டத்தில் அது முற்றி, மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரபாகரனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. அருகில் இருந்த பிரபாகரனின் தம்பி விக்னேஷ் (20) தடுக்க முயன்ற போது அவருக்கும் கத்தி குத்து காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த இருவரையும் ( பிரபாகரனையும் விக்னேஷையும் ) அருகில் இருந்தவர்கள் மீட்டு, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் மருத்துவமனை செல்லும் வழியிலயே பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து பந்தநல்லூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து உடற்கூறு ஆய்விற்காண‌ நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்  பிரபாகரனின் தம்பி விக்னேஷ்  தொடர்ந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதற்கிடையில் மணிகண்டனை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

காதல் விவகாரத்தில் காதலியின் தந்தையால், கத்தியால் குத்தி காதலன் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு பந்தநல்லூர் , வேட்டமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனால் அங்கு நூற்றுக்கனக்கான காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஊர் முழுக்க மயான அமைதி நிலவி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here