தஞ்சாவூர், மே. 26 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு …

தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயில் வைகாசிப் பெருவிழா, பொம்மை பூ போடுதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது, அவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சையை அடுத்த கரந்தை அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி திருக்கோயில் என்கிற அருள்மிகு வசிஷ்டேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது, இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் விளங்கி வருகிறது, ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டதும்,கரிகால் சோழ மன்னனுக்கு அருள்பாலித்து.

ஸ்ரீ வசிஷ்ட மகா முனிவரால் பூஜிக்கப்பட்ட தலமாகவும் விளங்கி வருகிறது, இத்தகைய பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வைகாசி மாத உற்சவம் கண்ணாடி பல்லாக்கு, மற்றும் வெட்டிவேர் பல்லாக்கு ஆகியன ஏழு ஊர்களை சுற்றி வரும் விழா நடைபெற்றது, இதனையடுத்து கண்ணாடி பல்லாக்கு ஏழுர் சுற்றி கோவிலுக்கு வந்ததும் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது,  அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லாக்கில் ஸ்ரீ சோமாஸ்கந்தர்,

ஸ்ரீ பெரியநாயகி அம்மன், ஸ்ரீ கந்தர் மற்றும் ஸ்ரீ தனி அம்மன் சுவாமிகள் பல்லாக்கில் எழுந்தருளினர், அதைப்போல் வெட்டிவேர் பல்லாக்கில் ஸ்ரீ வசிஷ்டர்,

ஸ்ரீ அருந்ததி அம்மன் சுவாமிகள் எழுந்தருளினர், அப்போது பக்தர்களின் கோஷங்களுக்கிடையே சுவாமிக்கு பொம்மை பூ போட்டது, தொடர்ந்து சுவாமிகளுக்கு  மஹா தீபாராதனை காட்டப்பட்டது, சிவகணங்கள், மங்கல வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் கண்ணாடி பல்லாக்கு மற்றும் வெட்டிவேர் பல்லாக்கினை தோளில் சுமந்தபடி கோவிலில் வலம் வந்தனர்,  இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here