காஞ்சிபுரம் எம்சாண்ட் லாரி ஓட்டுனர்கள் மீது பொய் வழக்குப் போடுவதை கண்டித்து உரிமையாளர்கள், மற்றும் லாரி ஓட்டுனர்கள் கை விலங்கு அணிந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி  மறுக்கப்பட்டதால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம், செப். 9 –

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு அனுமதி பெறாமல் சுமார் 150க்கும் மேற்பட்ட எம் சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு இருந்து சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எம்சாண்ட், லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது

இந்நிலையில் எம் சாண்ட் நிறுவனங்களிடமிருந்து பணம் கொடுத்து லாரி மூலம் எம்சாண்ட் எடுத்துச் செல்லும் பொழுது அதிகாரிகள் மடக்கிப் பிடித்து லாரி உரிமையாளர்கள் மீதும் லாரி டிரைவர்கள் மீதும் பொய் வழக்குகளைப் போட்டு சிறைக்கு அனுப்பி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனுமதி பெறாத எம் சாண்ட் நிறுவனங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காமல் கனிமவளத்துறை லாரி உரிமையாளர்கள் லாரி ஓட்டுனர்கள் மீது வழக்குப் போடுவதை கண்டிக்கும் விதமாக  தமிழ்நாடு எம்-சாண்ட் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் மாநில தலைவர் யுவராஜ் தலைமையில் லாரி உரிமையாளர்களும், லாரி ஓட்டுநர்களும் கைகளில் விலங்கிட்டு நூதன முறையில் மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கும் வகையிலும் தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையிலும் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

முன்கூட்டியே காவல்துறையினரிடம் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்த நிலையில்  இன்று ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி தர மறுத்து விட்டனர்.

இதனையடுத்து எம் சாண்ட் லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி ஓட்டுனர்கள் மாநிலத் தலைவர் யுவராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை சந்தித்து, எம்-சாண்ட் நிறுவனங்களை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும், அனுமதி பெறாத எம்சாண்ட் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,

லாரி உரிமையாளர்கள், லாரி ஓட்டுனர்கள் மீது பொய் வழக்குப் போடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை அளித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here