காஞ்சிபுரம், பிப். 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருகாலிமேடு பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத மக்கள் விரோத திமுக ஆட்சியை கண்டித்து தெருமுனை கூட்டமும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 76 வது பிறந்தநாள் கொண்டாட்ட விழா என இருப் பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கலந்து கொண்டு சிறைப்புரையாற்றினார் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்பு காஞ்சிபுரம் கந்தபுராணம் அரங்கேறிய திருக்கோவிலான குமரக்கோட்டம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் காஞ்சிபுரம் மாநகர கிழக்கு மண்டல செயலாளர் பாலாஜி ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளித்தேர் இழுக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகைச் செல்வன்  கலந்துகொண்டார். பின்பு சுவாமி முருகருக்கு சிறப்பு  அபிஷேகங்கள் , பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து  அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தங்க தேரினை  அமைச்சர்களுடன் சேர்ந்து அதிமுகவினர் வடம் பிடித்து கோவிலை சுற்றி இழுத்துச் சென்று வழிபாடு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் உள்ளிட்ட  நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர்  திரளாக கலந்து கொண்டனர் .

பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 39 திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் கூட அவர்களின் தொகுதிக்கு செல்லவில்லை, எனவும், எந்தவொரு மக்கள் நல பணிகளையும் அவர்கள் செய்யவில்லை,  எனவும், மேலும் தற்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்தவர்களாக உள்ளனர்கள். எனவும், ஆகையால் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் மக்கள் திமுகவிற்கு எதிராகவும், அதிமுகவுக்கு ஆதராவாகவம் வாக்களிப்பார்கள் என காஞ்சிபுரத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகை செல்வன் பேட்டியளித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here