காஞ்சிபுரம் செவிலிமேடு அருகே பிறந்து மூன்று நாட்களே ஆன பிஞ்சு குழந்தையைப் பார்க்க சென்ற தந்தை சாலை விபத்தில் பலியானச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம், செப் . 25 –

காஞ்சிபுரம் செவிலிமேடு ரோட்டு தெரு பகுதியை சேர்ந்த சுந்தரராஜ் என்பவரின் மகன் கார்த்திக் வயது 23. செவிலிமேடு அருகே உள்ள ஓரு தனியார் ஹார்டூவேர்ஸ் கடையில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு கடந்த 1வருடங்களுக்கு முன்பு நளினி என்பவருடன் திருமணமானது. இந்நிலையில் இவருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து நேற்று மாலை தனது மனைவியை செங்கல்கட்டு அரசு மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜாஜ் செய்து தனது மாமியார் வீட்டிற்கு குழந்தை மற்றும் மனைவியை அழைந்து சென்று விட்டு விட்டு திரும்ப இரவு இருவரையும் பார்க்க வருவதாக கூறிவிட்டு செவிலிமேட்டிலுள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து இரவு மீண்டும் மனைவி மற்றும் மகளை பார்க்க தாயார்குளம் பகுதியிலுள்ள தனது மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் ஜெம் நகர் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே அதிவேகமாக பயணிகளை ஏற்றிகொண்டு காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலை வழியாக சேலத்தை நோக்கி செல்லும் அரசு பேருந்தானது கார்திக் இருவாகனத்தின் பக்கவாட்டில் தட்டியதில் நிலை தடுமாறி பேருந்தின் சக்கரத்தில் மாட்டியதால் அவரது வாயிற்றின் மீது பேருந்து ஏறி இறங்கி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையெடுத்து அருகிலிருந்தவர்கள் படுகாயங்களுடன் இருந்த கார்த்திக்கை மீட்டு அவசர ஊர்த்தி மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதனையெடுத்து அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.இதனையெடுத்து அவரது சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.இது குறித்து தகலறிந்த வந்த தாலுகா போலீசார் அரசு பேருந்தினை பறிமுதல் செய்து ஓட்டுநரிடம் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது பிஞ்சு குழந்தையையும்,மனைவியையும் ஒன்றாக இணைத்து வைத்து பார்க்க ஆசை ஆசையாய் சென்றவர் சாலைவிபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here