காஞ்சிபுரம், ஜூன் 2 –

மருத்துவமனை செல்லும் வழியிலேயே சாலவாக்கத்தில் ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணி ஒருவருக்கு நடந்த பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட, ஆலஞ்சேரி மதுரா மலைக்காலனி கிராமத்தை  சேர்ந்தவர் நித்யா. நிறைமாத கர்பிணியான இவர் வீட்டில் பிரசவ வலி ஏற்ப்பட்டதால் சாலவாக்கம் 108 ஆம்புலன்சை அழைத்துள்ளார்.

உடனே விரைந்துச் சென்ற சாலவாக்கம் பகுதி ஆம்புலன்ஸ் அவரை மீட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமாக இருந்ததால்  ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் சாம்சுந்தர் மற்றும் ஓட்டுனர் முகேஷ் பிரசவம் பார்த்ததில் நித்யாவிற்கு ஆம்புலன்சிலேயே அழகிய ஆண் குழந்தை பிறந்தது

தொடர்ந்து, சாலவாக்கம் அரசு  மருத்துவமனைக்கு நித்யா அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here