காஞ்சிபுரம், மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
எடப்பாடி பழனிச்சாமியின் 70 ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கி காஞ்சி மாநகர அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் இந்து கோவில்கள், தர்காக்கள், கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு வழங்கப்பட்டது. கேக் வெட்டியும் அனைவருக்கும் வழங்கினர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட மாநகராட்சி அலுவலகம் எதிரே எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பிலும், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பிலும் எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி பெயர் பொருந்திய 70 கிலோ கேக் வெட்டியும் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணியும் வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பொதுமக்கள் ஒருவருக்கொருவர் கேக் மற்றும் பிரியாணி வாங்குவதற்காக முண்டியடித்துக் கொண்டு வாங்கி உண்டு மகிழ்ந்தனர்