திருவாரூர், மார்ச். 16 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சுமார் ரூ.4.06 கோடி மதிப்பில் திருவாரூர் மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நேற்றுக் காலை நடைபெற்றது.

இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனேஸ்வரி செந்தில் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் நகர மன்ற உறுப்பினர்கள்  அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு, பாலம் கட்டும் இடத்தினை நேரடியாக சென்று பார்வையிட்டனர். மேலும் அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணியும் துவங்கியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here