மீஞ்சூர், மார்ச். 01 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி மன்றத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் சார்பில் புரட்சி பாரதம் கட்சியின் தொழிற்சங்கம் அமைப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மீஞ்சூர் நகரத் தலைவர் என் சுரேஷ் தலைமை வகித்தார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் வா.சே. ராஜா. எஸ்சி எஸ்டி அணி பிரிவு பொறுப்பாளர் பிரபாகரன். சட்ட ஆலோசகர் ஐயப்பன். மீஞ்சூர் நகர சங்க செயலாளர் என் சீனிவாசன். துணை செயலாளர் தெய்வானை, குப்பம்மாள் ,பொருளாளர் ஜே .சுமதி. உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்,

இது சிறப்பு அழைப்பாளராக புரட்சி பாரத கட்சியின் மாநில தலைவரும். கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தியார் கலந்துகொண்டு சங்கத்தின் பெயர் பலகையை திறந்துவைத்து அமைப்பின் கொடியையும் ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். மேலும் இந்த தொழிற்சங்கத்தில் இணைந்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும் புரட்சி பாரதம் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை. இங்கு ஏற்பட்டுள்ள ஊதிய உயர்வு பணி சுமைகளை குறித்து புரட்சி பாரதத்தின் சார்பில் நடவடிக்கை எடுத்து நல்ல தீர்வு காணப்படும் என பேசினார் .எந்த சூழ்நிலையிலும் கட்சியின் தோழர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு துணையாக இருப்பார்கள் என பேசினார்.

இதில் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here