வலங்கைமான், ஏப். 10 –

வலங்கைமான் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீவீரமாகாளியம்மன் திருக்கோவிலின் பூட்டை உடைத்து சுமார் ரூபாய் 20000 ஆயிரம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்ககளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த புகழ்பெற்ற ஆலங்குடி குரு ஸ்தலம் பகுதியில் சோத்திரியம் கிராமத்தில் அமைந்துள்ள கோவிலை சுற்றி நெருக்கமாக வீடுகள் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் இப்பகுதிக்கு கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியினர் நேற்று இரவு அனைவரும் உறங்கிய வேளையில் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல், தங்க நகைகள், பணம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலையில் அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலின் பூட்டை உடைத்து கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து ப்பகுதிக்கு விரைந்து வந்த வலங்கைமான் காவல்துறையினர் நேரில் சென்று பார்வை விட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இதுக்குறித்து கோவில் பூசாரி செல்வா தெரிவிக்கையில் …

நேற்று இரவு வழக்கம் போல் 8. 50 மணிக்கு கோவிலின் நடை சாற்றப்பட்டது எனவும், மேலும் அதனைத்தொடர்ந்து வழக்கம் போல் காலையில் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் கோவில் பூட்டை உடைத்து திறந்துகிடைப்பதை கண்டு தனக்கு தகவல் தெரிவித்தனர் எனவும்,

மேலும் இச்சம்பவம் குறித்து உடனே கோவிலுக்குள் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் மற்றும் பீரோவில் வைத்திருந்த ரூபாய் 20000 ஆயிரம் ரொக்க பணமும் அம்மனின் திருமாங்கல்யம் காதில் அணிவிக்ககூடிய குண்டு ஆகியவை திருடு போயிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதுக்குறித்து வலங்கைமான் காவல்துறை ஆய்வாளர் ராஜா சம்பவ இடத்தை பார்வையிட்டு மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட் இக்கோவிலின் சித்திரை திருவிழா அடுத்த வாரம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இக்கோவில் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here