காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் மயிலாடுதுறையில் சர்க்கரை ஆலை அமைத்து தருவோம் மயிலாடுதுறை வழியாக முட்டம் இணைப்பு சாலை அமைத்து தருவோம் மயிலாடுதுறை சுற்றுவழி சாலை அமைத்து தருவோம் என உதயநிதி ஸ்டாலின் மயிலாடுதுறையில் உரை நிகழ்த்தினார்.

மயிலாடுதுறை, ஏப். 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் நேற்று விளையாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் மயிலாடுதுறையில்  காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

அப்போது அவர் வாக்காளர்களிடையே உரை நிகழ்த்தும்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சசிகலாவின் காலில் விழுந்துதான் ஆட்சிக்கு வந்தார் எனவும், மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடியும் எடப்பாடியும் இணைந்து ஒரு செங்கலை மட்டும் நட்டு வைத்தனர் எனவும்,

அந்த செங்கலையும் நாங்கள் எடுத்து வந்து விட்டோம் என்றார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 7 மருத்துவ கல்லூரியை அமைத்துள்ளோம் என்றும் முட்டம் வழியாக மயிலாடுதுறைக்கு இணைப்பு சாலை அமைத்து தருவோம் மேலும் சக்கரை ஆலை அமைத்து தருவோம் மற்றும் மயிலாடுதுறை  சுற்று வழிப்பாதை அமைத்து தருவோம் எனவும் அப்போது  பொதுமக்களிடம் பேசி வாக்கு சேகரித்தார்.

மேலும் நீங்கள் அனைவரும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து வாக்களியுங்கள் அவருக்கு வாக்களித்தால் கலைஞருக்கும் ஸ்டாலினுக்கும் நீங்கள் வாக்களித்தது போல் என்றவாறு கூறி உதயநிதி ஸ்டாலின் பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here