பூண்டி,  ஏப். 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி

பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் முன்னாள்  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தலைமையில் திருவள்ளூர் தனி தொகுதி இந்தியாக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான டிஜே கோவிந்தராஜன் அறிவுறுத்தலின்படி பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து மேலக்கருமனுர் ஊராட்சியில் முன்னாள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளரும் வழக்கறிஞருமான தில்லை குமார் தலைமையில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கியும், தமிழக முதல்வரின் இரண்டரை ஆண்டு கால சாதனைகளை விளக்கி கூறியும் மக்களிடையே வாக்கு சேகரித்தனர்.

இந்நிகழ்வின் போது அவர்கள் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தையும் மக்களிடையே எடுத்துக்கூறி விழிப்புனர்வை ஏற்படுத்தியும், முழக்கங்களை எழுப்பியவாரும் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

இந்நிகழ்ச்சியில்  பூண்டி கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் G.C.பால்சுதாகர் முன்னிலை வகித்தார். பூண்டி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சக்கரவர்த்தி  பாபு  வெங்கடாத்திரி ஸ்ரீராம் குப்பன் மற்றும் மாவட்ட, ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள் விஜயன் ராமராவ்  ரஞ்சித் எட்வர்ட் துரை பிரகாஷ் யுகேந்தர்குமார் மோகன் முனுசாமி பாண்டியன் உமாபதி முரளி இளங்கோவன் மேலக்கரமனூர் ஊராட்சி கழக உறுப்பினர்கள் குப்பன் பரமசிவம் மனோ  பிரகாஷ் தனா முரளி வேலு ஆசீர்வாதம் காட்டயன் சம்பத் பூங்கான் சுந்தராஜ் இளவழகன் கிருஷ்டன் தேவராஜ் சி.சு.சம்பத்வெங்கடேசன் நாராயணன் பாண்டியன் இன்பராஜ் துளசிராமன்  கலைமணி டில்லி நாகராஜ் சரத்குமார் அருண் சக்திவேல் இறையரசன் ஆகியோர் கலந்து கொண்டு கை சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here