பொன்னேரி, ஜூலை. 18 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று அந்நகர பி.ஜே.பி சார்பில் இரத்தானம் வழங்கும் முகாம் நடைப்பெற்றது. மேலும் இம்முகாமினை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் பிரானதா சக்ஷம் சேவா பாரதியினர் இணைந்து வழி நடத்தினார்கள்.

இம்முகாமிற்கு, அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்திருந்து இரத்த தானம் வழங்கினார்கள்.

முன்னதாக இன்று பிறந்தநாள் காணும் பொன்னேரி நகர பாஜக பொருளாளர் பாலாஜி முதலாவதாக இரத்த தானம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, பாஜக மாநில செயற் குழு உறுப்பினர் ஆர். எம். ஆர். ஜானகிராமன் இம்முகாமினை துவக்கி வைத்தார்.

மேலும் இம்முகாமில் சேகரிக்கப்பட்ட இரத்தங்களை பாதுகாப்புடன் எழும்பூர் அரசு குழ்ந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும், பொன்னேரி நகர பாஜக தலைவர் சிவகுமார் வெகுச்சிறப்பாக செய்திருந்தார்.

மேலும் இம்முகாமில் பாஜக மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் குமார், அன்பாலாயா சிவகுமார், நந்தன், கோட்டி, ரமேஷ், பவித்ரா,சு கன்யா, அப்பு மீஞ்சூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் ஸ்ரீராமன், சமூக ஆர்வலர்கள் ரகுநாத், ராதாகிருஷ்ணன், பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here