கும்மிடிப்பூண்டி, ஏப். 16 –

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர், கலைஞர் நகரில் உள்ள பெத்தேல் சுவிசேஷ திருச்சபை சார்பாக போதகர் அருண்குமார் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் புனிதவெள்ளி ஆராதனை மற்றும் ஏசுநாதர் ரத்தம் சிந்தியபடி சிலுவையில் அறைந்த காட்சியை பொதுமக்கள் அறியும் வகையில்  எளாவூர் பஜார் வீதி முழுவதும் ஊர்வலமாக வந்து காட்சி படுத்தினார்கள்.

அதேபோல் கும்மிடிப்பூண்டி மேட்டு காலனியில் உள்ள திறப்பின் சுவிசேஷ சபையின் போதகர் ஜேக்கப் தலைமையில் இயேசு நாதர் சிலுவையில் அறைந்த தினமான புனிதவெள்ளியை மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் கும்மிடிப்பூண்டி பஜார் முழுவதும் ஏசுநாதர் சிலுவையில் அறைந்தபடி நடைபெற்ற ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இயேசுநாதரின் வசனங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலம் சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here