கும்பகோணம், பிப். 24 –
கும்பகோணத்தில் இன்று அரசு போக்குவரத்து கழக வாயில் முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அண்ணா தொழில் சங்கம் சார்பில் கொண்டாடினார்கள்.
தமிழகத்தின் முதல் இளம் முதல்வர், 2 ஆவது பெண் முதல்வர், மாநில வரலாற்றிலேயே அதிக முறை (6 தடவை) முதல்வராக இருந்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
அவர் பெண் என்பதால் பெண்களின் தேவையைக் கூடுதலாய் உணர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது பெண்களுக்கான முன்னோடித் திட்டங்கள் பலவற்றைக் கொண்டு வந்தார்.
இன்று அவரின் 74ஆவது பிறந்த நாள் (பிப்ரவரி 24) நாடு முழுவதும் அதிமுக கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசு கும்பகோணம் போக்குவரத்து கழக வாயில் முன்பு உள்ள ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கர் தலைமையில் சங்க பிரதிநிதிகள் கொண்டாடினார்கள். இதில் தொழிற்சங்க தலைவர் நாகேஷ் பொருளாளர் ஜோசப் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.