திருவாரூர், மார்ச். 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜன்

உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பாத தரிசன விழாவில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

உலகப்பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் ஆண்டுக்கு இருமுறை தியாகராஜ சுவாமி பாத தரிசனம் நிகழ்ச்சி நடைபெறுவது  வழக்கம்.

திருவாதிரை நட்சத்திரத்தன்று தியாகராஜர் வியாக்கரபாத முனிவர், பதஞ்சலி முனிவர்களுக்கு வலதுபாத தரிசனம் நடைபெறும்.

இன்று பங்குனி உத்திரம் முன்னிட்டு பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்கரபாத முனிவருக்கு இடது பாத தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பாத தரிசனம் நிகழ்ச்சியில் காலை 6:00 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் நீண்ட வரிசையில்  சுவாமி தரிசனம் செய்து வருகின்றன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here