கடம்பத்தூர், ஜூலை. 07 –

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில்  பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மேற்படிப்பிற்கு செல்லும் ஐந்து ஏழை மாணவர்களுக்கு, தலா ரூ. 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 50 ஆயிரம் நிதியுதவியினை வெண்மனபுதூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வழங்கினார்.

வெண்மனபுதூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்  பி.பொன்னுசாமியின் மகன் அமெக்காவில் உள்ள  கேன்சர் பையாலஜி பிரிவு ஆசோசியட் பேராசியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பி.பி.மூரத்தி என்பவரின் துணையுடன், ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் படித்து மேற்படிப்புக்காக தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு  ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பி.பொன்னுசாமி தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ஐந்து மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்.

அதுப்போன்று இவ்வாண்டும் கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த (557/600 ) மாணவி ஆர். வளர்மதி ( பி.காம் ) , மற்றும் இப்பள்ளியில் படித்து ஏழ்மைநிலையில் உள்ள பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவி  கே.தமிழரசி ( பொறியியல் கல்லூரி ) எஸ்.ஷாம்குமார் (பொறியியல் கல்லூரி) எம்.பாலாஜி (பி.ஏ. பொருளாதாரம்) , எம்.வசந்த் (பி.ஏ ஆங்கிலம் ) ஆகியோர்  மேற்படிப்பிற்கு கல்லூரிகளில் சேர்ந்து கல்விப்பயில அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ 10.000 வீதம் மொத்தம் ரூ.50, 000  ரொக்கமாக வழங்கி உதவினார்.

இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை .வெ.ரேவதி தலைமை தாங்கினார்  , பெற்றோர் ஆசிரியர் கழகத்  தலைவர் பூபாலன் , பொருளாளர் பொன்னுதுரை முன்னிலை வகித்தனர் , தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் அனைவரையும் வரவேற்றார் நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியை வெற்றிச்செல்வி நன்றி கூறினார்.

 

செய்தியாளர் எஸ் வைஷ்ணவி

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here