திருவண்ணாமலை, ஜூலை.28-

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-2021ம் ஆண்டுக்கான 2ம் நிலை காவலர்கள் சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடந்து முடிந்தது. தொடர்ந்து தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் உடற்தகுதி தேர்வு தொடங்கியது. அதன் படி திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. திருவண்ணாமலை திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர். திருச்சி ஆயுதப்படைப் பிரிவு டி.ஐ.ஜி கயல்விழி திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் தேர்வு நடந்தது. சான்றிதழ்கள் சரி பார்ப்பு மற்றும் உடற் கூறு அளித்தலுக்கு பின்னர் ஓட்டப் போட்டி தேர்வு நடந்தது ஓட்டத்தில் தகுதிப் பெற்ற இளைஞர்களுக்கு அடுத்த நிலையான உடல் தகுதி தேர்வுகள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. உடல்தகுதி தேர்வு நடைபெற்ற ஆயுதப்படை வளாகத்தில் அடையாள அனுமதி சீட்டு வைத்திருந்த இளைஞர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று 2வது நாளாக உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here