ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கேணிக்கரை வலசை நாகாச்சி தேவர் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 48.
மீன்பிடி தொழிலாளி. நேற்று காலை இவர், கடையில் சாமான்கள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு ஆட்டோவில் செல்ல பஸ் ஸ்டாண்ட் சென்றார். உச்சிப்புளி பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ பிடித்து ஏறி உட்கார்ந்தார். அப்போது, கீழ நாகாச்சி வெள்ளமாசிவலசையைச் சேர்ந்த முருகேசன் மகன்கள் அங்கு வந்தனர். ஆட்டோவில் உட்கார்ந்திருந்த ராமச்சந்திரனுக்கும் முருகேசன் மகன்களுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உள்ள முன் விரோதம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் , ஆத்திரமடைந்த முருகேசன் மகன்கள் முனீஸ் , கார்த்தி ஆகியோர் இரும்பு கம்பியால் ராமச்சந்திரன் தலையில் பலமாக தாக்கினர். இதில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமச்சந்திரன் உடலை, உச்சிப்புளி போலீசார் கைப்பற்றி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக முனீஸ் என்ற முனீஸ்குமார் ( 27) கார்த்தி (22) ஆகியோரை உச்சிப்புளி போலீசார் கைது செய்தனர்.