காஞ்சிபுரம், செப் . 19 –
புரட்டாசி மாதம் பிறந்து முதல் ஞாயிறுயான இன்று மீன் மார்கெட்டில் மீன் வாங்க பெரும்பாலானோர் வராததால் காஞ்சிபுரம் மீன் மார்கெட் வெறிச்சோடி காணப்படுகின்றது
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே உள்ள மீன் மார்கெட்டில் எப்போதும் மீன் வாங்க கூட்டம் அலை மோதும் ஆனால் புரட்டாசி மாதம் என்பதால் ஒரு சிலர் மட்டுமே மீன் வாங்க வந்து சென்றனர் பெரும்பாலானோர் வரவில்லை. கடந்த வாரத்தை ஒப்பிடும் போது மீன்களின் விலையும் குறைந்துள்ளது
கடந்த வாரம் சீலா மீன் ஒரு கிலோ 350-க்கு விற்ற நிலையில் இந்த வாரம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. கோலா மீன் 200 ரூபாயிலிருந்து 150 ரூபாய்க்கும், சங்கரா 300 ரூபாயிலிருந்து 200 ரூபாய்க்கும், வஞ்ஜரம் 600 ரூபாயிலிருந்து 400 ரூபாய்க்கும், கடம்பா 300 ரூபாயிலிருந்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்வதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மீன்களின் விலை குறைந்தாலும் புரட்டாசி மாதம் என்பதால் மீன் வாங்க பெரும்பாலானோர் ஆர்வம் காட்டவில்லை இந்த புரட்டாசி மாதம் முழுவதும் இறைச்சியை விரும்பமாட்டார்கள் எனவே மீன், இறைச்சிகடைகளில் வியாபாரம் மந்தமாகவே இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துனர்.