காஞ்சிபுரம், ஏப். 10 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறகிறது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி இ.ராஜசேகர் அவர்களுக்கு கழகத்தினர் உற்சாகமாக பணியாற்றி இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, அதிமுக செய்தி தொடர்பாளரும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி, மாவட்ட அதிமுகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம்  அதிமுக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன்,  காஞ்சிபுரம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் உள்ளிட்ட கட்சியின் முன்னணியினருடன் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை  அன்னை சத்யா நகர் மற்றும் கண்ணகிபுரம் பகுதிகளில் வீதி வீதியாக சென்று அங்குள்ள பொதுமக்களை சந்தித்து, தேர்தல் பிரச்சார நோட்டீஸ் அளித்தும்,  தில்லுமுல்லு திமுக ஆட்சி என குற்றம்சாட்டி அக்கட்சியின் அவல நிலைகளை மக்களிடம் எடுத்துக் கூறியும் மேலும் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி செய்த திட்டங்களை எடுத்துக் கூறியும்,  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக முன்னோடிகளும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here