காஞ்சிபுரம், ஆக. 05 –

காஞ்சிபுரம் பகுதியில் இயங்கி வரும் IFS எனும் தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 5, 6, 7, 8, ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக பலரிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்று கொண்டு மோசடி செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் பொருளாதார குற்றபிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சோதனை காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ரங்கசாமிகுளம், மேட்டு தெரு, பொருளாதார குற்றபிரிவு அலுவலகம் அருகே, என மொத்தம் ஐந்து இடங்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பொருளாதார குற்றபிரிவு போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here