கடம்பத்தூர், ஆக 3 –

ஆட்டோ ஓட்டுனரை வழி மறித்து பட்டாக் கத்தியால் கை, மற்றும் காதில் மூன்று பேர் சேர்ந்த கும்பல் வெட்டி அவரது ஆட்டோவையும் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விட்ட சம்பவம் கடம்பத்தூர் காவல் சரகத்திற்கு உட்பட் பகுதியில் கடந்த ஆக 1 ஆம் தேதி நடைப்பெற்றதாக க் கூறி காவல்நிலையத்தில் ஏகாட்டூர் இந்திரா நகரில் வசிக்கும் செல்வம் என்பவரின் மகன் புருஷோத்தம்மன் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். அப்புகார் மனுவில் தனக்கும் ஏகாட்டூர் பட்டக்கொள்ளை பகுதியில் வசிக்கும் பிரதாப் , மணி, சின்னராஜன் மூன்று பேருடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வாய்தகராறு மற்றும் அடிதடி ஏற்பட்டு பின்பு எங்களுக்குள்ளேயே சமாதனம் செய்துக் கொண்டோம். இந்நிலையில் சம்பவத்தினத்தன்று எனது ஆட்டோவில் அன்னை இந்திரகாந்தி நகர் ஏகாட்டூர் கிராம டிவி ரூம் அருகில் வந்துக் கொண்டிருந்தேன் . அந் நேரம் ஏற்கனவே எங்களுக்குள் உள்ள முன்விரோதம் காரணமாக அம்மூவரும் எனை வழி மறித்து அசிங்கமான வார்த்தைகளால் திட்டியும், அவர்கள் வைத்திருந்த பட்டாக் கத்தியால் எனது ஆட்டோவின் முன்பக்கம் அடித்து சேதப்படுத்தியும் பின்பு அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து எனது இடதுப் பக்க தோள்பட்டை மற்றும் வலது பக்க கை இடதுப் புற காதுப் பகுதியிலும் பட்டாக் கத்தியால் வெட்டிவிட்டு தன்னை கொன்று விடுவதாகவும் கொலை மிரட்டல் விட்டனர். எனவும் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட காயத்திற்கு சென்னை அரசு மருத்துவ மனையில் உள் நோயாளியாக இருந்து சிகிச்சைப் பெற்று வருகிறேன். இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப் புகாரில் தெரிவித்துள்ளார். அது குறித்து கடம்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நணத்தி வருகின்றனர். இந் நிலையில் பிரதாப், மணி, சின்னராஜன் ஆகியோர் தலை மறைவாக உள்ளனர்.  அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here