திருவண்ணாமலை, அக்.9-

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 10ந் தேதி நடைபெறவுள்ள 5ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்களில் 92ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் வரும் 10ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசுகையில், கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனைத்து துறையின் ஒருங்கிணைப்புடன் கடந்த செப்டம்பர் மாதம் 12ந் தேதி அன்று முதல் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிக்காக 4 கட்டங்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்பட்டது.

வரும் 10ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் 1075 முகாம்களில் 92 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தாத நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயன் பெறலாம். இதற்கு அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here