செங்கல்பட்டு, பிப். 27 –
தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் …
செங்கல்பட்டு மாவட்டம், பழவேலி தனியார் உணவகத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் பாஸ்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூரத்தி கலந்துக் கொண்டார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சுந்தரமூர்த்தி, இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடந்த 3 ஆம் தேதி அன்று கடலுக்கு சென்று கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைபடுகளை சிறைபிடித்து படகுகளில் இருந்த 23 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம் 2 படகுகளின் ஓட்டுநர்களுக்கு தலா 6 மாதங்கள் சிறை தண்டனையும் ஒரு மீனவருக்கு ஒரு ஆண்டு ஆயுள் தண்டனையும் வழங்கி தீரப்பு வழங்கியுள்ளது.
அதனால் இராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த பத்து ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்குமுறை மேலும் அதிகரித்துள்ளதாகவும், மேலும் கடந்த பத்து ஆண்டுகளில் மீனவர்களின் சுமார் 400 படகுகள் மற்றும் சுமார் 3179 மீனவர்கள் என இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப் பட்டுள்ளனர். என்றார்.
மேலும் இந்நிலையில் நாளை துத்துக்குடி வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளாதாக அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும் அதன் பகுதியாக செங்கல்பட்டில் 200 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தவுள்ளதாக அப்போது மேலும் தெரிவித்தார்.
மேலும் அவ்வாலோசனைக் கூட்டத்தில் முன்னான் மாவட்ட தலைவர் அண்ணாதுரை, மறைமலைநகர் நகர தலைவர் தனசேகர், Obs மாநில பொதுச்செயலாளர் பால்ராஜ், மாவட்ட துணை தலைவர் வெங்கடபெருமாள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துக் கொண்டனர்.