சென்னை, பிப். 20 –
தருமபுரி மாவட்டத்தில் நடைப்பெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப் பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக்கொண்டிருந்த வட்டாட்சியர் அதியமான் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
அச்செய்தியினைக் கேட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாரடைப்பால் உயிரிழந்த வட்டாட்சியர் அதியமான் மறைவு தமக்கு மிகுந்த வேதனையளிப்பதாகவும், அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அவ் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.




















