செங்கல்பட்டு, மே. 15 –

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை சின்னதம்பி, வசந்தா, வென்னியப்பன், சந்திரா மற்றும் மாரியப்பன் உள்ளிட்ட 5-பேர்கள் உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து மேலும், மதுராந்தகம் அடுத்த பேரம்பாக்கம் மற்றும் பெருங்கரணை ஆகிய பகுதியைச் சேர்ந்த அஞ்சலை, தம்பு, சங்கர், அமாவாசை, முத்து ஆகிய 5-பேர்கள் கவலைக்கிடமான நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டலின் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, தமிழக அரசு சார்பில் தலா ரூ. 10-லட்சம் ஒவ்வொருக்குடும்பத்திற்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கி உள்ளார். மேலும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமாக ஐந்து பேர்கள் நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து வருகிறார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here