பொன்னேரி, ஜூலை. 20 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்னையில் நடைப்பெறயிருக்கும் 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாட்  போட்டியை முன்னிட்டு வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் 14 வயது 17வயது 19 வயது மூன்று பிரிவுகளில் 27 அரசு பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று ஆர்வமுடன்  விளையாடினர்.

இதில் மாவட்ட கல்வி அலுவலர் மோகனா கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர் ராமமூர்த்தி உடற்கல்வி பயிற்சியாளர் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here