சென்னை, டிச. 24 –

சென்னை கண்ணகிநகர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் 60-வயதான ஆறுமுகம் என்பவர். இவர்  கூழ் வியாபாரம் செய்து வருகிறார். இன்று மாலை ஆறுமுகம் கண்ணகிநகர் காவல் நிலையம் வந்து தனது மனைவியை கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் கூறி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

ஆறுமுகம் சொன்னதை கேட்ட போலீசார் அவரை காவல் நிலையத்தில் அமர வைத்து விட்டு அவரது வீட்டுக்கு சென்று பார்த்த போது ஆறுமுகத்தின் மனைவி உயிரிழந்த நிலையில் பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, போலீசார் ஆறுமுகத்தின் மனைவி 50-வயதான கஸ்தூரி உடலை மீட்டு உடற் கூறாய்வுக்காக சென்னை இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் காவல் நிலையத்தில் உள்ள ஆறுமுகத்திடம் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் தனது மனைவியை கொலை செய்வதாற்காக முன்னதாகவே திட்டம் தீட்டி கத்தி ஒன்றை வாங்கி வைத்துள்ளதாகவும், இன்று மனைவியிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முதலில் கட்டையால் அடித்துள்ளார். பின்னர் அவர் கொலை செய்வதற்காக வாங்கி வைத்திருந்த கத்தியை வைத்து குத்தும் போது அவரது மனைவி தடுத்ததால் கத்தி கீழே விழுந்ததாகவும், மீண்டும் கட்டையை எடுத்து அடித்த போது கட்டை இரண்டாக உடைந்த்து எனவும் உடைந்த கட்டையை எடுத்து மனைவியின் வயிற்றில் குத்தி கொடூரமாக கொலை செய்ததாக கூறியுள்ளார். ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்து கண்ணகிநகர் போலீசார் மேலும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here