செங்கல்பட்டு, ஏப். 26 –

செங்கல்பட்டு மாவட்டம், பையனூர் பகுதியில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் சுமார் 1500 கோடி மதிப்பீட்டில் ஃபிலிம் சிட்டி கட்டப்பட்டு வருகிறது.

மேலும் இங்கு அரசு சார்பில் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ள நிலையில், மேலும் சாலை வசதி அமைத்து தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே கோரிக்கை மனுவினை அக்கூட்டமைப்பின் சார்பில் அளிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

இந்நிலையில் அங்கு புதிய சாலை அமைத்திட சுமார். ரூ. ஒரு கோடி திட்ட மதிப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், அதில் 3-ல் 1-பங்கு தொகையாக ரூ. 35-லட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் அதன் நிர்வாகிகள் 5-பேர் கொண்ட குழுவினர், கடந்த 24 ஆம் தேதியன்று, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திடம் வழங்கினார்கள்.

மேலும் தற்போது புதியதாக கட்டப்பட்டு வரும் இப் ஃபிலிம் சிட்டியில் பாதி பணிகள் நிறைவு பெற்ற நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படபிடிப்பு நடந்து முடிந்திருப்பதும், மேலும் நடிகர் விஜயின் லியோ படப்பிடிப்பு நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here