திருவாரூர், ஜன. 20 –
திருவாரூரில் வேகமாக வந்த தனியார் பேருந்தின் மீது மோதிய சைக்கிளில் வந்த முதியவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பித்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நேற்று முன்தினம் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் நோக்கி வந்த தனியார் பேருந்து பேருந்து நிலையத்திற்க்குள் நுழைந்தபோது மற்றொரு பகுதியில் இருந்து சைக்கிளில் வந்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த திலகர் என்பவர் பேருந்தின் பின்பக்க படிக்கட்டு பகுதியில் மோதி கீழே விழுந்தார்.
மோதிய சத்தம் கேட்டு, உடனடியாக பேருந்தை நிறுத்தப்பட்டு அதிலிருந்தவர்கள் கீழே இறங்கி பஸ்ஸின் மீது மோதி விழுந்தவரை தூக்கி விட்டனர்.
இச்சம்பவத்தில் அதிஷ்டவசமாக அவருக்கு எவ்வித காயமும் உயிர் தப்பினார். இவ்விபத்துக் குறித் வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.