பெரியபாளையம், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி…
பெரியபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்களின் செயல்கள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களுக்கு பெரியப்பாளையம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்..
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த 82, பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (68) இவரது மனைவி ஆதிலட்சுமி (62) இவர்கள் சொந்தமாக ஆடுகள் வளர்த்து சிறிய அளவில் பால் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஆதிலட்சுமி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு ஆடுகள் மாயமானது அதுக் குறித்து பாதிக்கப்பட்ட நபர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள தனியார் அலுவலகத்தின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது மர்ம நபர்கள் இருவர் முகமூடி அணிந்து வந்து இருசக்கர வாகனத்தில் ஆடுகளை திருடி செல்வது பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுப்போல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதே கிராமத்தில் ஆடு ஒன்று திருடு போனது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.