மீஞ்சூர், நவ. 30 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள திருவெற்றியூர் நெடுஞ்சாலை பல வருட காலமாக சீரமைக்கப்படவில்லை எனவும், சமீபத்தில் பெய்து வரும் கடும் மழையால் மேலும் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருவதாகவும், அதனால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி நூதன முறையில் தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக போராட்டம் நடத்தினார்கள்.

அப்போராட்டத்திற்கு, மீஞ்சூர் மேற்கு ஒன்றிய தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், மாவட்ட துணை தலைவர் பரமானந்தம், இருசப்பன், அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் நெல்லை பாலன் ஊடக பிரிவு  கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

மீஞ்சூர் முதல் வல்லூர் வரையில் மழையால் சேதமடைந்த நெடுஞ்சாலையை போர்க்கால அடிப்படையில் சீர் செய்து தருமாறு கண்டன முழக்கங்களை அவர்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் பாஜக நிர்வாகிகள் மாலதி, வருண்காந்தி, சத்யநாராயணன், ராஜேஷ், உள்ளிட்ட ஏராளமான பாஜக தொண்டர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here