ஆவடி, மார்ச். 11 –

நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான 5 மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆவடி மாநகராட்சி பகுதிகளில்  கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் ஆவடி லயன் டாக்டர் எஸ் கே எஸ் மூர்த்தி தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here