சைக்கிளில் வேலைக்கு சென்றவர் மீது பைக் மோதி இடுப்பில் படுகாயம் , மோதியவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி உறவினர் காவல் நிலையத்தில் புகார்
திருவள்ளூர் , ஜூலை-11,
திருவள்ளூர் தாலூக காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார் . சம்பவத்தன்று வேலை நிமித்தமாக தனது சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஸ்பெலன்டர் பைக்கிள் வந்த நபர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து ராஜேந்திரனின் சைக்கிளில் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேந்திரனனின் இடுப்பில் படுகாயம் ஏற்பட்ட்டுள்ளது. அதனை த் தொடர்ந்து அவரது உறவினரான காக்களூர் ஆஞ்சினேயர் புரம் 15 வது தெருவில் வசிக்கும் கோவிந்த ராஜ் என்பவரின் மகன் ரவி என்பவருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் அளிக்க அதன் பேரில் அவரை திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் சேர்ந்துள்ளார். அதனை தொடர்ந்து பைக்கிள் வந்து மோமி விபத்தை ஏற்படுத்தி பலத்த காயத்தை ஏற்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கும் படி திருவள்ளூர் தாலூகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . அதன் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.