தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்திற் குட்பட்ட தும்மக்குண்டு கிராமத்தில் சைல்டு லைன் சார்பில் திறந்த வெளி மலம் கழித்தல் பற்றிய விழிப்புணர்வு,
பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு, ஒவ்வொருவர் வீட்டிற்கு மரம் வளர்ப்பது அவசியம் பற்றிய விழிப்புணர்வு,
சைல்டு லைன் 1098 குறித்த விழிப்புணர்வு பற்றி கோலத்தின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தேனி சைல்டு லைன் சார்பில் அணி உறுப்பினர்கள் கார்த்திக், சந்திரா, மணிவண்ணன், பவித்ரா, கற்பக வள்ளி ஆகியோர் கலந்து கொண்டு அப்பகுதி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.