சென்னை, ஜன. 28 –

இன்று தலைமைச் செயலகத்தில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைப்பெற்ற தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழகத்தைச்சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஆர்.அனுபமா ( 2 தங்கப்பதக்கங்கள் 1 வெள்ளிப்பதக்கம் ) பி.ஸ்னேத்ரா பாபு ( 1 தங்கப்பதக்கம் ) மற்றும் ஸ்ரீகிருஷ்ணா ( 1 தக்கப்பதக்கம் ) ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவரிடம் வாழ்த்துப் பெற்றனர். உடன் தமிழ்நாடு பில்லியர்ஸ் மற்றும் ஸ்னூக்கர்ஸ் சங்கத்தலைவர் சவுமினி ஸ்ரீநிவாஸ், முன்னாள் துணைத்தலைவர் எஸ்.கே.என். ராஜமோகன் ஆகியோர் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here