திருவாரூர், டிச. 01 –
திருவாரூர் நகர வர்த்தக சங்க தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலில் வாக்களிக்க 1391 வாக்காளர்கள் உள்ளார்கள் எனவும், மேலும் அவர்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள்தானா என்ற அடிப்படையில் அதுப்பற்றி ஆய்வு மேற் கொள்ள வேண்டிவுள்ளதாகவும், மேலும், முறையான நபர்களை மட்டும் வாக்களிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், அதற்கானப் பணியை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாகவும், அதற்கு சற்று காலம் தேவைப்படும் என்பதாலும் சங்க தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் எனவும், மேலும் திருவாரூர் நகர எல்லைக்குட்பட்ட வர்த்தகர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும் .அதனை அரசு ஆராய்ந்து அனுமதிக்க வேண்டும் எனவும் தற்போது நடைபெற உள்ள வர்த்தக சங்க தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவாரூர் வர்த்தக சங்க உறுப்பினர்கள் சார்பாக ஏறாளமான நிர்வாகிகள் மனு அளித்தனர்.