மன்னார்குடி, டிச. 27 –

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருள்மிகு பிரஹன்நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ ஜெயங்கொண்டநாதர் திருக்கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மையார் மாணிக்கவாசகர், ஆகியோருக்கு பல்வேறு அபிஷேக திரவியங்களான மாபொடி,  மஞ்சள்தூள்,  திராவிபொடி , பழ வகைகள் , தேன், பன்னீர், சந்தனம், திருநீறு, பால் , தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

 

அந்நிகழ்வினைக் காண திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரத்திற்கு பின்பு சுவாமியை பயப்பக்தியுடன் தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here