திருவொற்றியூர், ஏப். 03 –

திருவொற்றியூர் தொகுதி 7 வது வட்டத்தில் உள்ள அண்ணாமலைநகர் பகுதி அருகில் உள்ள அண்ணாநகரில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல வருடங்களாக ரயில்வே நிலத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு இரயில்வே துறை சார்ந்த பணிகள் மேற்கொள்ளப் படுவதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவ்விடத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இரயில்வே துறை உத்தரவு பிறப்பித்தது.

இதனையறிந்து திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ சங்கர் அவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யும் வரை இரயில்வே இடிப்புத் திட்டப் பணியினை கைவிடப்பட வேண்டும் என இரயில்வே அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் தற்காலிகமாக பணியை நிறுத்தி வைத்தனர். அதனால் நேற்று  மாலை அவரை அந்த ஊர் மக்கள் எம்எல்ஏ வை  சந்தித்து அவருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்வின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி போன்ற  நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ வழங்கினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here