திருவாரூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்..
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சார களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திருவாரூரில் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் தலைமையில் அதிமுக நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சுர்சித் சங்கர் இன்றைய தினம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட விளமல் பகுதியில் தொடங்கி துர்காலயா ரோடு, தென்றல் நகர் , இ வி எஸ் நகர், கொடிக்கால் பாளையம், கேக்கரை, கீழ வீதி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களுடன் பேரணியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கீழ வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேட்பாளர் சுர்சித் சங்கர் டீ போட்டுக் கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டது அப்பகுதி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார்.
பிரச்சாரத்தில் அதிமுக நகர கழக செயலாளர் ஆர்டி மூர்த்தி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.