திருவாரூர், மார்ச். 01 –

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலூகா செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல் நிலை பள்ளியில், நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மீண்டும் மஞ்சப்பை என்கிற நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வு அப்பள்ளியின் தலைமையாசிரியர் இராமன் தலைமையில் நடைபெற்றது.  மேலும் இதில் ஆசிரியர்கள் சண்முகம் மணிவண்ணன் தேவேந்திரன் திட்ட அலுவலர் முருகதாஸ் சரவணக்குமார்  ஆகியோர் இந்நிகழ்வுக்கு முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து மாணவர்களுக்கு மஞ்சப்பை பயன் படுத்துவதுக் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் மனிதயினம் மற்றும் இயற்கை வளத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்து அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம்  வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here