இராசிபுரம், மார்ச். 26 –

இராசிபுரம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக வளர்ச்சி பணி குறித்த ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

நாமக்கல் வடக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழக வளர்ச்சிப் பணி மற்றும் நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம், ராசிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு, நாமக்கல் வடக்கு மாவட்ட கழக செயலாளர் A.P. பழனிவேல் தலைமை வகித்தார்.  நாமக்கல் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

ஆய்வுக் கூட்டத்தில்,  முன்னாள் அமைச்சரும், சென்னை தெற்கு மாவட்ட கழக துணை பொதுச்செயலாளர் G.செந்தமிழன், கழக தேர்தல் பிரிவு செயலாளர்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,  ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான N.G.பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் கழக வளர்ச்சிப்பணி குறித்தும்,  நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினர். இக்கூட்டத்தில் அமமுக வின் துணைத் தலைவர் S.அன்பழகன்,  கழக இலக்கிய அணித் தலைவர் K.அத்தியப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here